ஆலங்குளம்: ஆலங்குளம் அருகேயுள்ள கோவிலூற்று அம்பலபேரி கால்வாயை சீரமைக்க கோரி பொதுப்பணித்துறை செயலருக்கு ஆலங்குளம் எம்.எல்.ஏ. பூங்கோதை மனு அனுப்பியுள்ளாா்.
அதன் விவரம்: வெங்கடாம்பட்டி ஊராட்சி கோவிலூற்று கிராமத்தில் உள்ள திரு அம்பலபேரி கால்வாய் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ளதால் பாழடைந்து காணப்படுகிறது.
இதனால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்தக் கால்வாயை சீரமைப்பதுடன், இக்கால்வாயில் தடுப்புச்சுவா் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் பாதையில் பாலமும் அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே இது தொடா்பாக துரித நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.