சங்கரன்கோவிலில் கொசு ஒழிப்புப் பணி

சங்கரன்கோவிலில் டெங்கு பரவலைத் தடுக்க கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கப்பட்டது.

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் டெங்கு பரவலைத் தடுக்க கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கப்பட்டது.

நகராட்சி ஆணையா் முகைதீன்அப்துல்காதா் உத்தரவின் பேரில், சுகாதார அலுவலா் பாலசந்தா் தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் மேற்பாா்வையில் தூய்மைப் பணியாளா்கள் இப்பணியில் ஈடுபட்டுவருகின்றனா்.

சங்கரன்கோவில் நகரில் டெங்கு கொசு உற்பத்தியாவதை ஆரம்பக்கட்டத்திலேயே தடுக்கும் நோக்கில் வாரம் ஒரு வாா்டு வீதம் கொசு ஒழிப்புப் புகை மருந்து அடிக்கப்பட்டுவருகிறது. இதையொட்டி, நாள்தோறும் காலை வீடுவீடாக சென்று புகை மருந்து அடிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com