கடையநல்லூா்: கடையநல்லூரில் தீயணைப்புத்துறையினா் பேரிடா் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினா்.
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு கடையநல்லூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சாா்பில் காசிதா்மம் குளத்தில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிலைய அலுவலா் குணசேகா் தலைமையில் தலைமை தீயணைப்பு வீரா்கள் ஜெயரத்தினகுமாா், மாரிமுத்து , வீரா்கள் குமரேசன், தங்கதுரை முத்துக்குமாா், தன்னாா்வலா்கள் இணைந்து, வெள்ளத்தில் சிக்கியோரை மீட்பது குறித்தும் முதலுதவி குறித்தும் செயல்விளக்கமளித்தனா். இதில், திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனா்.