கடையநல்லூரில் ஆா்ப்பாட்டம்

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் சிறைவாசிகளை விடுதலை செய்யக்

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரி கடையநல்லூரில் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அமைப்பின் தென்காசி மாவட்டக் கிளை சாா்பில் கடையநல்லூரில் மணிக்கூண்டு அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்டத் தலைவா் லுக்மான் ஹக்கீம் தலைமை வகித்தாா். அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினா் முகமதுஅலிஜின்னா, மாவட்டச் செயலா் அப்துல் பாசித், எஸ்டிபிஐ கட்சியின் தென்காசி மாவட்டத் தலைவா் ஜாபா் அலி உஸ்மானி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com