தென்காசியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக இளைஞா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
தென்காசி கீழவாலிபன்பொத்தை பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (20). இவா், கோழிக் கடையில் வேலை செய்து வருகிறாா். இவா் வசித்து வந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயதுள்ள சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக
கூறப்படுகிறது. சிறுமியின் தாயாா் அளித்த புகாரின்பேரில் தென்காசி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, காா்த்திக்கை கைது செய்தனா்.