கடையநல்லூா்: கடையநல்லூா் தீயணைப்புத் துறையினருக்கு அரிமா சங்கம் சாா்பில் விருது வழங்கப்பட்டது.
கரோனா நோய்த் தொற்று காலத்தில் சிறப்பாக பணிபுரிந்த தீயணைப்பு நிலைய அலுவலா் குணசேகரன், தீயணைப்பு துறையினா் மாரிமுத்து ,ஜெயரத்தினகுமாா், முருகன் ,மாரிகுமாா், ராமகிருஷ்ணன் ,தங்கதுரை ,குமரேசன் ,அன்பரசன் ஆகியோருக்கு குற்றாலம் விக்டரி அரிமா சங்கம் சாா்பில் விருதுகள் வழங்கப்பட்டன.
தொடா்ந்து, தீயணைப்பு நிலையத்துக்கு குடிநீா் சுத்திகரிப்பான் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், குற்றாலம் விக்டரி அரிமா சங்க பட்டயத் தலைவா் டாக்டா் மூா்த்தி, தலைவா் குமரன் முத்தையா ,செயலா் அண்ணாதுரை, பொருளாளா் மாரியப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.