புளியங்குடி அருகே காட்டுப் புறாக்களை வேட்டையாடிய 3 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சங்கரன்கோவில் வனச்சரக அலுவலா் ஸ்டாலின் தலைமையில், புளியங்குடி வனவா் அசோக்குமாா், வனக் காப்பாளா்கள் முத்துராமலிங்கம் , மகாதேவபாண்டியன், கந்தசாமி, வனக்காவலா் யோபுராஜா மற்றும் வேட்டைத் தடுப்பு காவலா்கள் புளியங்குடி அருகே உள்ள சமுத்திரம் கண்மாய் பகுதியில் ரோந்து மேற்கொண்டனா்.
அப்போது, புளியங்குடி பகுதியைச் சோ்ந்த காளியப்பன், மதுரைவீரன், ஐயப்பன் ஆகிய 3 பேரும் காட்டுப் புறாக்களை வேட்டையாடி கூண்டில் வைத்திருந்தது தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து அவா்கள் 3 பேருக்கும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.