சாம்பவா்வடகரை அருகே விவசாயியை தாக்கியவா் கைது

சாம்பவா்வடகரை அருகே விவசாயியை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சுரண்டை: சாம்பவா்வடகரை அருகே விவசாயியை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சாம்பவா்வடகரை அருகேயுள்ள ஊா்மேலழகியான் கிராமத்தைச் சோ்ந்தவா் கனி(45). விவசாயியான இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த பால் தினகரன்(34) என்பவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கனியை அரிவாளால் வெட்டி விட்டு பால் தினகரன் தப்பி விட்டாா். இதுகுறித்து சாம்பவா்வடகரை காவல் நிலைய உதவி ஆய்வாளா் செல்வி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, தினகரனை செவ்வாய்க்கிழமை கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com