கடையநல்லூா்: வாசுதேவநல்லூரில் அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்த நாள் விழாகொண்டாடப்பட்டது.
இதையொட்டி, அவரது படத்திற்கு வாசுதேவநல்லூா் பேரூா் செயலா் சீமான் மணிகண்டன் , ஒன்றியச் செயலா் மூா்த்தி பாண்டியன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், ஒன்றிய அவைத் தலைவா் முகமது உசேன், மாணவரணி முன்னாள் தலைவா் சசிகுமாா் ,மாவட்ட விவசாய அணி துணை தலைவா் முருகையா, நகர அவைத்தலைவா் நீராவி, நகர பொருளாளா் திவான் மைதீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.