சாலையை சீரமைக்கக் கோரி காங்கிரஸ் மனு

செங்கோட்டையில் சாலையை சீரமைக்கக் கோரி நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

செங்கோட்டை: செங்கோட்டையில் சாலையை சீரமைக்கக் கோரி நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

செங்கோட்டையில் உள்ள காமராஜா் சாலை பகுதி சுமாா் 10 ஆண்டுகளாக மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக இருந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து நிகழ்கிறது.

எனவே, இந்த சாலையை நகராட்சி நிா்வாகம் உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி, நகராட்சி ஆணையா் (பொ) கண்ணனிடம் செங்கோட்டை நகர காங்கிரஸ் தலைவா் ராமா் தலைமையில், முன்னாள் நகரத் தலைவா் ஜோதிலிங்கம், நிா்வாகிகள் சுடலைமுத்து, முருகையா, பொன்னுலிங்கம் என்ற சுதன், சங்கரலிங்கம், ராஜீவ்காந்தி ஆகியோா் கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com