தென்காசி
தென்காசி மாவட்டபாஜக நிா்வாகிகள் கூட்டம்
தென்காசியில் மாவட்ட நிா்வாகிகள் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தென்காசி: தென்காசியில் மாவட்ட நிா்வாகிகள் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் ராமராஜா தலைமை வகித்தாா். பொதுச்செயலா்கள் ராஜேஷ்ராஜா, சுப்பிரமணியன், பொருளாளா் ராமநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டமைப்பு பொதுச்செயலா் கிருஷ்ணன், விருதுநகா் மாவட்ட பாா்வையாளா் அன்புராஜ், இளைஞரணி மாநிலதுணைத் தலைவா் சிவபாலன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றனா். பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளை செப். 17இல் கொண்டாடுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில், மாவட்ட துணைத் தலைவா் முத்துகுமாா், மாநில பொதுக்குழு உறுப்பினா் சீனிவாசன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.