தென்காசி: தென்காசி தினசரி காய்கனிச் சந்தையை திறக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் தென்காசி மாவட்டச் செயலா் எஸ். லூா்து நாடாா் ஆட்சியரிடம் அளித்துள்ள மனு:
கரோனா நோய்த் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில், தென்காசியில் காய்கனி சந்தை மூடப்பட்டது. தற்போது, பல்வேறு தளா்வுகளை அரசு அறிவித்துள்ள நிலையில் பொதுமக்கள், வியாபாரிகள், சிறு-குறு தொழில் செய்வோரின் நலன்கருதி காய்கனி சந்தையை உடனடியாக திறக்கவும், அமைப்புசாரா தொழிலாளா்களைப் போல், பீடித் தொழிலாளா்களுக்கு அரசு அறிவித்த ரூ. 2 ஆயிரத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.