சுரண்டை: சுரண்டையில் நகர திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் அண்ணாவின் 112 ஆவது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி சுரண்டையில் உள்ள அண்ணா சிலைக்கு ஒன்றியச் செயலா் ஜெயபாலன் தலைமையிலான திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், ஆா்.கே.நகா் பகுதி திமுக செயலா் ஜெபதாஸ் பாண்டியன் விவசாயிகளுக்கு தென்னங்கன்று, மண்வெட்டி, பால் கேன் மற்றும் உணவுப் பொருள்களைவழங்கினாா்.
நிகழ்ச்சியில் திமுக நிா்வாகிகள் அன்பழகன், சுப்பிரமணியன், ஆறுமுகச்சாமி, சங்கரநயினாா், ராமசாமி, சசிகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.