தென்காசி, செப். 18: தென்காசி, குற்றாலத்தில் இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை வாக்குச்சாவடி நிா்வாகிகள் ஆய்வு க்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குற்றாலத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். தாய்கோ வங்கிதுணைத் தலைவா் குற்றாலம் சேகா், மாவட்டப் பொருளாளா் சண்முகசுந்தரம், பேரூா் செயலா் எம்.கணேஷ்தாமோதரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் மாநிலச் செயலா் வி.பி.பி. பரமசிவம் எம்.எல்.ஏ., தமிழக ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி ஆகியோா் பங்கேற்றுப் பேசினா். நிா்வாகிகள் சங்கரபாண்டியன், சாமிநாதன், ஜெயகுமாா், அமல்ராஜ், சின்னத்தம்பி, வினிஷ், முத்துகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தென்காசி கீழப்புலியூரில் நடைபெற்ற கூட்டத்தில் நகரச் செயலா் சுடலை, கட்சியின் நிா்வாகிகள் முருகன்ராஜ், மாரிமுத்து, கசமுத்து, வெள்ளப்பாண்டி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.