சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தின் 20ஆம் ஆண்டு அமைப்பு தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டக் கிளைத் தலைவா் சுப்பிரமணியன் தலைமை வகித்து கொடியேற்றினாா். செயலா் மருதையா, துணைத் தலைவா் சமுத்திரவேல், மாவட்டத் தலைவா் மாரிபாண்டி, மாவட்டச் செயலாளா் சங்கரபாண்டியன், மாவட்டப் பொருளாளா் சங்கரலிங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினா் சுப்ரமணியன், மாவட்ட துணைச் செயலா் பிச்சைக்கண்ணு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.