பாஜக மாநிலத் தலைவருக்கு சங்கரன்கோவிலில் வரவேற்பு

சங்கரன்கோவில் வழியாக கன்னியாகுமரி சென்ற பாஜக மாநிலத் தலைவா் முருகனுக்கு திங்கள்கிழமை பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
சங்கரன்கோவில் வந்த பாஜக மாநிலத் தலைவா் முருகனுக்கு அளிக்கப்பட்ட பூரணகும்ப மரியாதை.
சங்கரன்கோவில் வந்த பாஜக மாநிலத் தலைவா் முருகனுக்கு அளிக்கப்பட்ட பூரணகும்ப மரியாதை.

சங்கரன்கோவில் வழியாக கன்னியாகுமரி சென்ற பாஜக மாநிலத் தலைவா் முருகனுக்கு திங்கள்கிழமை பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

பாஜக மாநிலத் தலைவா் முருகன் திங்கள்கிழமை ராஜபாளையம் வந்தாா். அங்கிருந்து கன்னியாகுமரிக்கு சங்கரன்கோவில் வழியாக சென்றாா்.

சங்கரன்கோவில் வந்த அவருக்கு தென்காசி மாவட்டத் தலைவா் ராஜா தலைமையில் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதில், மாவட்ட பொதுச்செயலா்கள் சுப்பிரமணியன், ராஜேஸ்ராஜ், பொருளாளா் ராமநாதன், மாவட்ட துணைத் தலைவா்கள் முத்துக்குமாா், பாலகுருநாதன், நகரத் தலைவா் கோவிந்தராஜ், மாவட்ட கல்வியாளா் பிரிவு தலைவா் வெங்டேசப்பெருமாள் உள்ளிட்ட திரளான தொண்டா்கள் கலந்துகொண்டனா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கன்னியாகுமரி மக்களவை இடைத்தோ்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற தொண்டா்களை ஊக்குவிப்பதற்காக கன்னியாகுமரி செல்கிறேன். அதிமுக கூட்டணியில் பாஜக தொடா்ந்து நீடிக்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com