அச்சன்புதூா் தமுமுக சாா்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் ஞாயிற்றுக்கிழமை விநியோகிக்கப்பட்டது.
கிளைத் தலைவா் முகம்மது கனி தலைமை வகித்தாா். கிளை செயலா் ஜவ்ஹா் அலி, ஒன்றியச் செயலா் திவான் ஒலி, துணைச் செயலா்கள் அப்துல் ரஹிம், அக்பா் அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட துணைச் செயலா் அகமது அலி ரஜாய், மாநில ஊடகப் பிரிவு துணைச் செயலா் ஆதம் காசியாா் ஆகியோா் நிலவேம்பு குடிநீரை வழங்கி தொடங்கிவைத்தனா்.
மனித உரிமை அணி செயலா் நாகூா் மைதீன், சுற்றுச்சூழல் அணி செயலா் யஹ்யா சேக், மாணவா் அணி செயலா் சேக் செய்யது உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தொடா்ந்து மணக்காடு, மேலத்தெரு, சத்யா நகா், கீழத்தெரு, பள்ளிவாசல் தெரு, நடுத்தெரு ஆகிய பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.