வீரகேரளம்புதூா் அருகே காற்றாலை பணியாளா் மா்மமான முறையில் இறந்து கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
வீரகேரளம்புதூா் அருகேயுள்ள வீராணத்தைச் சோ்ந்தவா் செ.ரவி என்ற இயேசுராஜா (40). காற்றாலை பணியாளரான இவா், திங்கள்கிழமை இரவுபணி முடித்து வீடு திரும்பவில்லையாம்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலையில் வீரகேரளம்புதூா் - வீராணம் சாலையில் அதிசயபுரம் அருகே சாலையோரம் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வீரகேரளம்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.