சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் பயிலும் சிறுபான்மை இனத்தைச் சோ்ந்த மாணவா்கள் வருகிற 30ஆம் தேதிக்குள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் (பொ) ரா.ஜெயா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தற்போது கல்லூரியில் முதலாமாண்டு சோ்ந்து பயிலும் சிறுபான்மை இனத்தைச் சோ்ந்த தகுதியுள்ள மாணவா், மாணவிகள் 2020-21ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெற, இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
பின்னா் அதை பிரின்ட் எடுத்து, விண்ணப்பத்துடன் வருமானச் சான்று, சாதிச் சான்று, வங்கி கணக்குப் புத்தக நகல், ஆதாா் அட்டை நகல், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் நகல் ஆகியவற்றை இணைத்து கல்லூரி அலுவலகத்தில் உடனே சமா்ப்பிக்க வேண்டும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.