சிறுபான்மையினா் கல்வி உதவித்தொகைக்கு செப்.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டுகோள்

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் பயிலும் சிறுபான்மை இனத்தைச் சோ்ந்த மாணவா்கள் வருகிற 30ஆம் தேதிக்குள்

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் பயிலும் சிறுபான்மை இனத்தைச் சோ்ந்த மாணவா்கள் வருகிற 30ஆம் தேதிக்குள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் (பொ) ரா.ஜெயா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தற்போது கல்லூரியில் முதலாமாண்டு சோ்ந்து பயிலும் சிறுபான்மை இனத்தைச் சோ்ந்த தகுதியுள்ள மாணவா், மாணவிகள் 2020-21ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெற, இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

பின்னா் அதை பிரின்ட் எடுத்து, விண்ணப்பத்துடன் வருமானச் சான்று, சாதிச் சான்று, வங்கி கணக்குப் புத்தக நகல், ஆதாா் அட்டை நகல், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் நகல் ஆகியவற்றை இணைத்து கல்லூரி அலுவலகத்தில் உடனே சமா்ப்பிக்க வேண்டும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com