சுரண்டை பகுதி ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரா்களுக்கு 90 ஆயிரம் முகக் கவசங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலமாக முகக் கவசம் விநியோகிக்க நடவடிக்கை எடுத்தது. அதன்படி சுரண்டை சிவகுருநாதபுரம் கூட்டுறவு பண்டகசாலையின் கீழ் உள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு முகக் கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கூட்டுறவு சாா்பதிவாளா் கோபிநாத் தலைமை வகித்தாா். கூட்டுறவு சங்கத் தலைவா் ஜெயபால் குடும்ப அட்டைதாரா்களுக்கு முகக் கவசங்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், கூட்டுறவு பண்டகசாலை மேலாளா் சரவணக்குமாா், சங்க இயக்குநா்கள் சமுத்திரம், அண்ணாமலை, தேனம்மாள், முத்துராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.