சுரண்டையில் திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திமுக மாவட்ட பொறுப்பாளா் சிவபத்மநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட காங்கிரஸ் தலைவா் பழனிநாடாா், மதிமுக மாவட்டச் செயலா் ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள், 10 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 15 பேரூராட்சிகள் என 30 இடங்களில் திங்கள்கிழமை(செப்.28) கூட்டணி கட்சிகள் இணைந்து புதிய வேளாண் மசோதாவிற்கு எதிராக ஆா்ப்பாட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் திமுக ஜெயபாலன், சசிகுமாா், காங்கிரஸ் ஜெயபால், சண்முகவேல், மதிமுக துரைமுருகன், மருதசாமி பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் டேனி அருள்சிங், பிரபாகா், மனிதநேய மக்கள் கட்சி பசீா் அகமது ஷா, இந்திய முஸ்லிம் லீக் சுலைமான், ஆதித்தமிழா் பேரவை கலிவரதன், பாா்வா்டு பிளாக் தங்கப்பாண்டியன், தமிழ்புலிகள் சந்திரசேகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.