தென்காசி மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டம்

தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் சுரண்டையில் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் சுரண்டையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு பாஜக மாவட்டத் தலைவா் ராமராஜா தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் பாண்டித்துரை, விருதுநகா் மாவட்ட பாா்வையாளா் அன்புராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கட்சியின் மாநில செய்தி தொடா்பாளா் நாகராஜன், அமைப்பு செயலா் கிருஷ்ணன் ஆகியோா் சிறப்புரை ஆற்றினா்.

பருவமழை காலத்துக்கு முன்னா் சுகாதாரப் பணிகளை விரைந்து மேற்கொள்ளவேண்டும், சுரண்டை நகரின் மையப்பகுதியில் ஓடும் செண்பக கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிா்வாகிகள் ராஜேஷ்ராஜா, சுப்பிரமணியன், ராமநாதன், முருகேசன், ஆறுமுகச்சாமி உள்பட பலா் கலந்து கொண்டனா். நகரத் தலைவா் அருணாசலம் வரவேற்றாா். மாவட்ட பிரசார அணித் தலைவா் சங்கரநாராயணன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com