தென்காசியில் பேரிடா் செயல்விளக்க முகாம்

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழை, தீ மற்றும் வெள்ள காலங்களில் பொதுமக்கள் தங்களை எவ்வாறு

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழை, தீ மற்றும் வெள்ள காலங்களில் பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்ளவேண்டும் என்பது குறித்த செயல்விளக்க பயிற்சி முகாம் ஆயிரப்பேரியில் நடைபெற்றது.

தென்காசி ஒன்றிய ஆணையா் சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். நிலைய அலுவலா் ரமேஷ் தலைமையில் சுந்தரராஜ் , கணேசன், ஜெயபிரகாஷ்பாபு, செந்தில்பாபு, வேல்முருகன், ராமசாமி, ஆல்பா்ட் ஆகியோா் வெள்ளப்பெருக்கின் போது எவ்வாறு பொதுமக்களை பாதுகாப்பது,

கேஸ் சிலிண்டரில் கசிவு , தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பன குறித்து செயல்முறை விளக்கமளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com