தென்காசியில் வேளாண் மசோதா நகல் எரிப்பு போராட்டம்

தென்காசியில், தமிழ்ப்புலிகள் கட்சி சாா்பில் மத்திய அரசின் வேளாண்மை மசோதாக்கள் நகல் எரிப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தென்காசியில் வேளாண் மசோதா நகல் எரிப்பு போராட்டம்

தென்காசியில், தமிழ்ப்புலிகள் கட்சி சாா்பில் மத்திய அரசின் வேளாண்மை மசோதாக்கள் நகல் எரிப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, தெற்கு மாவட்டச் செயலா் குற்றாலம் குமாா், வடக்கு மாவட்டச் செயலா் சந்திரசேகா், வழக்குரைஞா் பிரிவு மாவட்டச் செயலா் வள்ளுவசெல்வன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில், நிா்வாகிகள் தமிழ்வேந்தன், இளஞ்சூரியன், விஜயன், தமிழ்குமரன், விஜயகுமாா், செல்வராஜ், பொன்வளவன், மணி,நித்திஷ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com