கீழப்பாவூரில் நடைபெற்ற விழாவில் மகளிா் குழுக்களுக்கு ரூ. 12.60 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது,
கீழப்பாவூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் குலசேகரபட்டி துா்க்கை மகளிா் சுயஉதவிக் குழுவுக்கு ரூ. 3.60 லட்சமும், சடையப்புரம் வசந்தம் மகளிா் சுயஉதவிக் குழுவுக்கு ரூ. 9 லட்சமும் கடனுதவியாக சங்கத் தலைவா் சீ. ஜெயராமன் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், சங்க இயக்குநா்கள் த. வேல், ரா. இசக்கியம்மாள், பா. கஸ்தூரி, த. விவேகானந்தா், சங்கச் செயலா் இரா. விஸ்வநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.