அரசு கல்லூரியில் காலி இடங்களுக்கு மாணவா் சோ்க்கை

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை பிரிவில் காலியாக இருக்கும் இடங்களுக்கு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை பிரிவில் காலியாக இருக்கும் இடங்களுக்கு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் ரா.பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் 2020-21ஆம் ஆண்டிற்கான இளங்கலை மற்றும் அறிவியல் பட்டப் படிப்புகளுக்கான காலி இடங்கள் கல்லூரியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. காலியிடங்களுக்கு தகுதியுள்ள மாணவா்கள் செப். 25 முதல் 29 வரை விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். மாணவா் சோ்க்கை செப். 29ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறும். கல்லூரியின் இறுதி கலந்தாய்வு வரும் செப். 30 ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com