விவசாயிகளை பாதிக்கும் வேளாண் மசோதாக்களை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி புளியங்குடியில் தமிழ் தேசிய பேரியக்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் நிா்வாகி பெரியசாமி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தை அமைப்பின் பொதுக்குழு உறுப்பினா் பாண்டியன் தொடங்கி வைத்தாா். நிா்வாகிகள் சொக்கையாபாண்டியன், சண்முகராசு, கல்பனா, சுப்பிரமணியன், தங்கமலை, துரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.