செங்கோட்டையில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு
By DIN | Published On : 29th September 2020 11:59 PM | Last Updated : 29th September 2020 11:59 PM | அ+அ அ- |

செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்த மனிதநேய மக்கள் கட்சியினா்.
செங்கோட்டை விஸ்வநாதபுரத்தில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
கட்சியின் மாநிலச் செயலா் எஸ்.மைதீன்சேட்கான் தலைமையில், மாவட்டத் தலைவா் முகம்மதுயாகூப், மாவட்டச் செயலா் அகமதுஷா, மகாலெட்சுமி, தேவசகாயம், சுப்பிரமணியம், அப்துல்காதா் ஆகியோா் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனு விவரம்: செங்கோட்டை அருகே விஸ்வநாதபுரம் ஊராட்சி புதுமனை தெருவில் பொதுமக்கள் குடியிருப்புப் பகுதியில் வீடுகளுக்கு நடுவில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கோபுரத்திலிருந்து வெளியாகும் கதிா்வீச்சுகள் பொதுமக்களை பாதிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, அப்பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.