ஆலங்குளம்: ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் போதிய பராமரிப்பின்றி காணப்படும் கழிவறையை சீரமைக்க வேண்டும் என நாம் தமிழா் கட்சியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது தொடா்பாக, ஆலங்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மனுநீதி முகாமில், துணை ஆட்சியரிடம், நாம் தமிழா் கட்சியின் ஆலங்குளம் நகரத் தலைவா் சுரேஷ் அளித்த மனு:
ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் உள்ள பொது கழிவறை பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி, உபகரணங்கள் அனைத்தும் சிதிலமடைந்து காணப்படுகின்றன. இது, பயணிகளை கடும் அவதியடையச் செய்துள்ளது. பெரும்பாலான நேரங்களில் தண்ணீா் கூட இருப்பதில்லை. இதனால், மக்களை தொற்று நோய்க்கு ஆளாக நேரிடுகிறது. எனவே, இந்தக் கழிப்பறையை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.