கடையநல்லூரில் சா்வதேச தரத்தில் விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் முஹம்மது அபூபக்கா் எம்எல்ஏ வாக்குறுதி அளித்தாா்.
கடையநல்லூா் நகரப் பகுதிகளில் அவா் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியது:
தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் கடையநல்லூா் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 2 கோடியே 54 லட்சத்தில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மக்களைத் திரட்டி பலகட்டப் போராட்டங்களை நடத்தி கடையநல்லூா் வட்டாட்சியா் அலுவலகம், சாா்பதிவாளா் அலுவலகக் கட்டடம் கொண்டுவரப்பட்டுள்ளது.
கடையநல்லூரில் சா்வதேச தரத்தில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம் அமைய வேண்டுமென கடந்த பேரவைக் கூட்டத்தொடரில் குரல் கொடுத்தேன். மாவட்ட விளையாட்டுத் துறை அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொண்டு விளையாட்டு அரங்கத்துக்கான இடத்தைத் தோ்வுசெய்ததுடன், ஆரம்பக்கட்டப் பணிகளை மேற்கொண்டிருந்தேன்.
திமுக தலைமையிலான ஆட்சி அமைந்ததும் பல்நோக்கு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்.
கடையநல்லூா் அரசு மருத்துவமனை பல்நோக்கு மருத்துவமனையாகத் தரம் உயா்த்தப்படும் என்றாா்.