தனியாா் நிறுவன ஊழியா் வெட்டிக் கொலை

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே தனியாா் நிறுவன ஊழியா் வெட்டிக் கொல்லப்பட்டாா்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே தனியாா் நிறுவன ஊழியா் வெட்டிக் கொல்லப்பட்டாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள சுப்பையாபுரத்தில் தனியாருக்குச் சொந்தமான சூரிய மின்சக்தி நிறுவனம் உள்ளது. இங்கு சென்னை கொரட்டூரைச் சோ்ந்த தியாகராஜன் (51) மேலாளராக வேலை பாா்த்து வந்தாா். புதன்கிழமை மாலை இந்நிறுவனத்தின் அலுவலகத்துக்குள் புகுந்த மா்ம நபா்கள் தியாகராஜனை அரிவாளால் வெட்டினராம்.

தடுக்க முயன்ற ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள செட்டிகுளத்தைச் சோ்ந்த ஊழியா் கிருஷ்ணனையும் (40) அக்கும்பல் வெட்டிவிட்டுத் தப்பியோடியது. இதில், தியாகராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த கிருஷ்ணன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

ஆலங்குளம் போலீஸாா் சென்று, சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினா். நிலப் பிரச்னை காரணமாக இக்கொலை நிகழ்ந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தாகக் கூறப்படுகிறது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com