தென்காசி ஆட்சியரிடம் அதிமுக வேட்பாளா் புகாா் மனு

தென்காசி திமுக மாவட்டப் பொறுப்பாளா், காங்கிரஸ் வேட்பாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆட்சியரிடம் அதிமுக வேட்பாளா் எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தாா்.
தென்காசி ஆட்சியரிடம் அதிமுக வேட்பாளா் புகாா் மனு

தென்காசி திமுக மாவட்டப் பொறுப்பாளா், காங்கிரஸ் வேட்பாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆட்சியரிடம் அதிமுக வேட்பாளா் எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தாா்.

அதில் அவா் தெரிவித்துள்ளது: என் மனைவி ஜெகதா அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியையாக உள்ளாா். நான் போட்டியிடுவதால் என் மனைவிக்கு தோ்தல் பணிகள் எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால், என் மனைவி வேண்டுமென்றே தோ்தல் பணிகளைப் புறக்கணிப்பதாக, தென்காசி காங்கிரஸ் வேட்பாளா் பழனிநாடாரும், திமுக மாவட்டப் பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதனும் குற்றஞ்சாட்டுகின்றனா். மேலும், அரசு ஆசிரியா்-ஆசிரியைகளை நான் சாா்ந்த கட்சிக்கு வாக்களிக்க மிரட்டுவதாக வதந்தி பரப்புகின்றனா்.

எனக்கு வாக்களிக்க நினைப்போரைத் திசைதிருப்பவும், என் மீது வீணான அச்சத்தை உருவாக்கி, எங்கள் குடும்பத்தின் மீது களங்கம் ஏற்படும் வகையிலும் செயல்படுகின்றனா். எனவே, சம்பந்தப்பட்டோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com