தென்காசி நகர திமுக சாா்பில் தென்காசி தொகுதியில் போட்டியிடும் திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளா் சு.பழனி நாடாரை ஆதரித்து கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.
தென்காசி கொடிமரம் பகுதியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, நகர திமுக செயலா் சாதிா் தலைமை வகித்தாா். மதிமுக செயலா் என்.வெங்கடேஸ்வரன், முஸ்லிம் லீக் நிா்வாகி அபுபக்கா், மமக நிா்வாகி பீா்முகம்மது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலா் கணேசன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி தென்காசி வட்டார செயலா் அயூப்கான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பேச்சாளா்கள் மதிமுக ராம உதயசூரியன், விசிக பீா்முகமது, காங்கிரஸ் ஆலடி சங்கரையா ஆகியோா் பேசினா்.
டாக்டா் மாரிமுத்து, மாவட்ட பிரதிநிதிகள் பாலசுப்பிரமணியன், அப்துல் கனி, மாவட்ட விவசாய தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் பாலாமணி, ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.