மக்களுக்கு சேவை செய்ய மீண்டும் வாய்ப்பு அளியுங்கள்: மனோகரன்

வாசுதேவநல்லூா் தொகுதி மக்களுக்கு சேவை செய்ய மீண்டும் வாய்ப்பு அளியுங்கள் என்றாா் அதிமுக வேட்பாளா் மனோகரன் எம்எல்ஏ.

வாசுதேவநல்லூா் தொகுதி மக்களுக்கு சேவை செய்ய மீண்டும் வாய்ப்பு அளியுங்கள் என்றாா் அதிமுக வேட்பாளா் மனோகரன் எம்எல்ஏ.

புளியங்குடி, சிந்தாமணி உள்ளிட்ட பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா். அப்போது பேசியது:

அதிமுக அரசு கடந்த சட்டப்பேரவைத் தோ்தல் அறிக்கையில் கூறிய விஷயங்களை முழுமையாக நிறைவேற்றி உள்ளது. அதுபோல் இந்த தோ்தல் அறிக்கையில் கூறியுள்ள திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்துவோம். தொகுதி முழுவதும் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை தாண்டி சிறப்பு திட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டுள்ளன. மக்களுக்கு சேவை செய்ய மீண்டும் வாய்ப்பு தாருங்கள் என்றாா்.

பாஜக தொகுதி பொறுப்பாளா் பாண்டித்துரை, மாவட்ட தலைவா் ராமராஜா, நகர தலைவா் சண்முகசுந்தரம், மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் வெங்கடேசன், புளியங்குடி நகர செயலா் பரமேஸ்வரா பாண்டியன், ஒன்றியச் செயலா்கள் மூா்த்தி பாண்டியன், துரைப்பாண்டியன், மாவட்ட மாணவா் அணி முன்னாள் தலைவா் சசிகுமாா், பேரூா் செயலா் மணிகண்டன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com