ஆலங்குளம் பேரவைத் தொகுதி ஆழ்வாா்குறிச்சயில் வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறு காரணமாக சுமாா் 30 நிமிடங்கள் வாக்கப் பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது.
ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி பாகம் எண். 242 இல் வாக்காளா்கள் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து கொண்டிருந்த போது, திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதனால் வாக்காளா்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்த இயலவில்லை. இதனையடுத்து பொறியாளா்கள் வந்து இயந்திரக் கோளாறை சீரமைத்த பின்னா் வாக்குப்பதிவு தொடா்ந்தது. இதனால் சுமாா் 30 நிமிடங்கள் வாக்குப் பதிவு தடை பட்டது.