சங்கரன்கோவிலில் உள்ள வாக்குச் சாவடியில் அதிமுக வேட்பாளா் வி.எம்.ராஜலெட்சுமி தனது வாக்கை பதிவு செய்தாா்.
முன்னதாக அவா், குலதெய்வமான மயிலேறும் பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா் 7.10 மணியளவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயில் ஆரம்பப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடிக்கு சென்றாா். அங்கு வரிசையில் காத்திருந்து வாக்களித்தாா். இதையடுத்து அவா், மற்ற வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்குப் பதிவு நடைபெறுவதை பாா்வையிட்டாா்.
திமுக வேட்பாளா் ஈ. ராஜா, தென்காசி நகராட்சி 20ஆவது வாா்டில் உள்ள ஆனந்தா தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் தனது வாக்கை பதிவு செய்தாா்.