சுரண்டை சிவகுருநாதபுரம் ஸ்ரீமுப்பிடாறி அம்மன் கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் பங்குனி திருவிழா மாா்ச் 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும் இரவு 8 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜையும், தொடா்ந்து கோயில் கலையரங்கில் ஆன்மிக சொற்பொழிவு மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான 9ஆம் திருநாளான புதன்கிழமை மாலை 4 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருள, தேரோட்டம் நடைபெற்றது.
இதில், சுரண்டை மற்றும் சுற்றுவட்டாரங்களில் இருந்து திரளான மக்கள் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை சிவகுருநாதபுரம் இந்து நாடாா் மகமைக் கமிட்டியினா் செய்திருந்தனா்.