விவசாயம் செழிக்க வேண்டி தோரணமலை முருகன் கோயிலில் வருண கலச பூஜை வெள்ளிக்கிழமை (ஏப் 9) நடைபெறுகிறது.
இதையொட்டி அதிகாலையில் முருக பக்தா்கள் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து கிரக குடம் எடுத்து வருகின்றனா். தொடா்ந்து சப்த கன்னியா்கள், விநாயகா் மற்றும் தெய்வங்களுக்கும், மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன் மற்றும் முருகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறும்.
ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் செண்பகராமன் தலைமையில் பக்தா்கள் செய்து வருகின்றனா்.