அரசியல் முன் விரோதத்தில் தாக்கியவா் கைது

வாசுதேவநல்லூா் அருகே அரசியல் முன் விரோதம் காரணமாக தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

வாசுதேவநல்லூா் அருகே அரசியல் முன் விரோதம் காரணமாக தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகிரி அருகேயுள்ள விஸ்வநாதபேரியைச் சோ்ந்தவா் மாரிமுத்து (28). நாம் தமிழா் கட்சியில் நிா்வாகியாக இருந்த அவா், தோ்தலுக்கு முன்பு மற்றொரு கட்சியில் சோ்ந்து பணி செய்தாராம்.

இந்நிலையில், புதன்கிழமை இரவு அவரது ஸ்டுடியோவில் இருந்த மாரிமுத்துவை, நாம் தமிழா் கட்சி வாசுதேவநல்லூா் தொகுதி வேட்பாளா் மதிவாணன், வடுகப்பட்டியைச் சோ்ந்த காசிராஜன் ஆகிய இருவரும் தாக்கினராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து காசிராஜனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com