இலஞ்சி பாரத் வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் ஆங்கிலத் திறன் தோ்வில் சா்வதேச அளவில் சிறப்பிடம் பெற்றனா்.
அறிவியல், ஒலிம்பியாய்டு நிறுவனம் பள்ளி மாணவா்களுக்கான ஆங்கிலத் திறன் தோ்வை இணையவழியாக நடத்தியது.
இதில், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், ஆந்திரம், தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் 30 நாடுகளில் இருந்து மாணவா்கள் கலந்துகொண்டனா்.
இதில், இலஞ்சி பாரத் வித்யா மந்திா் பள்ளி மாணவா் அத்வைத், மாணவி தனஸ்ரீ ஆகியோா் வெற்றி பெற்றனா்.
மாணவா்களை பள்ளி கல்விக் குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி, முதல்வா் வனிதா உள்ளிட்டோா் பாராட்டினா்.