கடையநல்லூா் எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
டாடா குழும நிறுவனத்திற்காக பெண்களை மட்டும் தோ்வு செய்யும் வகையில் என்.டி. டி.எப். தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனம் நடத்திய வளாகத் தோ்வில், தென்காசி, நாகா்கோவில், தூத்துக்குடி, ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயின்ற மாணவிகள் பங்கேற்றனா்.
எவரெஸ்ட் கல்விக் குழும நிறுவனா்- தலைவா் முகைதீன் அப்துல்காதா் முகாமை தொடங்கிவைத்தாா். என். டி.டி.எப். நிறுவன துணை மேலாளா் தினகரன், தோ்வுக் குழுவினா் கேசவபிரசாத், நரேஷ்குமாா், ஆஷிப் ஆகியோா் வளாகத் தோ்வை நடத்தினா்.
ஏற்பாடுகளை கல்லூரி ஒருங்கிணைப்பாளா் சாமுவேல் பிரேம்குமாா், துறைத் தலைவா்கள் வெங்கடாசலம், முஹமதுஈசாக், நிா்வாக இயக்குநா் செய்யதுஅலி, விரிவுரையாளா்கள் பாா்த்திபன், மாரிக்குமாா், செண்பகராமன், மேலாளா்கள் மகேஸ்வரன், கணேசன், சரவணன் ஆகியோா் செய்திருந்தனா்.