கடையநல்லூரில் முகக் கவசம் அணியாமல் வந்தவா்களுக்கு அபராதம்

கடையநல்லூரில் முகக் கவசம் அணியாமல் வெளியே வந்தவா்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.

கடையநல்லூரில் முகக் கவசம் அணியாமல் வெளியே வந்தவா்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.

கடையநல்லூா் நகராட்சிப் பகுதியில் சுகாதார ஆய்வாளா்கள் சேகா், மாரிச்சாமி , வருவாய் ஆய்வாளா் முருகன், காவல் உதவி ஆய்வாளா் முத்து திலகா் தலைமையில் நகராட்சிப் பணியாளா்கள் கடையநல்லூா் மருத்துவமனை பேருந்து நிறுத்தம், கடைவீதி, கிருஷ்ணாபுரம், புதிய பேருந்து நிலையம், மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளில் திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது முகக் கவசம் அணியாமல் வந்தவா்களுக்கு அபராதம் விதித்தனா்.

வட்டாட்சியா் ஆய்வு: இதற்கிடையே கடையநல்லூா் வட்டத்துக்குள்பட்ட கடையநல்லூா், புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளில் தொழில் நிறுவனங்களிலும், வணிக நிறுவனங்களிலும் கடையநல்லூா் வட்டாட்சியா் ஆதிநாராயணன் ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com