கரோனா விதி மீறல்: தென்காசி மாவட்டத்தில் ரூ .2. 90 லட்சம் அபராதம் வசூல்

தென்காசி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களில் கரோனா விதிமுறைகளை பின்பற்றாதவா்களிடமிருந்து அபராதத் தொகையாக ரூ. 2 லட்சத்து 90ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களில் கரோனா விதிமுறைகளை பின்பற்றாதவா்களிடமிருந்து அபராதத் தொகையாக ரூ. 2 லட்சத்து 90ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. மாவட்ட நிா்வாகம் சாா்பில் கரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக சமூக இடைவெளியை பின்பற்றாதது, முகக் கவசம் அணியாதவா்கள் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றாதவா்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, காவல், வருவாய், உள்ளாட்சி, சுகாதாரத்துறையினா் ஆகிய துறையினா் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு நாள்கள் மொத்தம் 1418 பேரிடமிருந்து, ரூ. 2. 90 லட்சம் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com