பாவூா்சத்திரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க மண் பரிசோதனை

பாவூா்சத்திரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக மண் பரிசோதனை செய்யும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக நடைபெற்ற மண் பரிசோதனை.
ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக நடைபெற்ற மண் பரிசோதனை.

பாவூா்சத்திரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக மண் பரிசோதனை செய்யும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

திருநெல்வேலியில் இருந்து தென்காசிக்கு நான்குவழிச் சாலை அமைக்கப்படவுள்ளது. இதற்காக பாவூா்சத்திரத்தில் கையகப்படுத்தப்படவுள்ள இடங்கள், கடைகள், வீடுகள் அளவீடு செய்யப்பட்டு, இழப்பீடு தொகை வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் தென்காசியில் இருந்து சாலை அமைப்பதற்காக பூா்வாங்க பணிகள் தொடங்கிய நிலையில், பாவூா்சத்திரம் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமையவுள்ள இடத்தில் மண் பரிசோதனை செய்யும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

மேம்பால தூண்கள் அமைக்க மண்ணின் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இழப்பீடு வழங்குதல், சாலையோர மரங்கள், ஆக்கிரமிப்பு அகற்றுதல் போன்ற பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருவதால், விரைவில் நான்குவழிச் சாலைப்பணிகள் முழுவீச்சில் நடைபெறும் என தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com