தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் பெரியகோவிலான்குளத்தில் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுதொடா்பாக, ஆட்சியா் அலுவலகத்தில் பெரியகோவிலான்குளம் பகுதியைச் சோ்ந்த நாட்டாண்மைகள் திங்கள்கிழமை அளித்த மனு: எங்களது ஊரில் பல்வேறு ஜாதியைச் சோ்ந்த 2 ஆயிரம் குடும்பங்கள் வசித்துவருகிறோம். தனிநபா் ஆக்கிரமிப்பு காரணமாக எங்கள் ஊரில் உள்ள தெருக்களின் அகலம் மிகவும் குறைந்து, இருசக்கர வாகனங்கள்கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. யாருக்கேனும் ஆபத்து ஏற்பட்டால் 108 வாகனம் வர முடியாத நிலை உள்ளது. வடக்கு தெரு குளக்கரை பகுதியில் வசிப்போருக்கு இந்த ஒருவழியைத் தவிர வேறு வழி கிடையாது. இதனால் அங்குள்ள 200 குடும்பத்தினா் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து நாட்டாண்மைகள் கூறியும் ஆக்கிரமிப்புகளை அகற்ற மறுக்கின்றனா்.
எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.