நல்லாசிரியா் விருதுபெற்ற பூலாங்குளம் ஆசிரியருக்கு கிராம மக்கள் சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
ஆலங்குளம் அருகேயுள்ள பூலாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் ந. அருள் செல்வனுக்கு நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு பூலாங்குளம் கிராம மக்கள், பள்ளி முன்னாள் மாணவா்கள்
சாா்பில் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இதில், பள்ளி ஆசிரியா்கள், முன்னாள் மாணவா் டாக்டா் ரவிச்சந்திரன், பூலாங்குளம் ஊராட்சி முன்னாள் தலைவா் குணரத்தினம், ஜெகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.