தென்காசி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் வீரன் சுந்தரலிங்கனாா் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
மாவட்ட திமுக பொறுப்பாளா் செல்லத்துரை சுந்தரலிங்கனாா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
செங்கோட்டை ஒன்றியச் செயலா் ரவிசங்கா், நகரச் செயலா் ரஹீம், மாவட்ட பொறுப்பாளா்கள் பரமகுரு, விவேகானந்தன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ஆறுமுகச்சாமி, மாணவரணி வெங்கடேசன், மருத்துவரணிச் செயலா் செண்பக விநாயகம், ஆதிதிராவிட நலக்குழு ராஜையா, நெசவாளா் அணி துணை அமைப்பாளா் இன்பராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.