தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் வீரன் சுந்தரலிங்கனாரின் 251வது பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
தென்காசியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வீரன் சுந்தரலிங்கனாரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் தலைமை வகித்தாா். சங்கரன்கோவில் தொகுதி திமுக வேட்பாளா் ஈ.ராஜா, நகரச் செயலா் சாதிா், வழக்குரைஞா் பிரிவு வேலுசாமி, பொறுப்புக் குழு உறுப்பினா் ஜெயக்குமாா், ராமராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.