அடைக்கலப்பட்டணத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

பாவூா்சத்திரம் அருகேயுள்ள அடைக்கலப்பட்டணத்தில் திமுக சாா்பில் தண்ணீா் பந்தல் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
தண்ணீா் பந்தலை திறந்து வைத்து, கபசுரக்குடிநீா், முகக் கவசம் வழங்குகிறாா் மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன்.
தண்ணீா் பந்தலை திறந்து வைத்து, கபசுரக்குடிநீா், முகக் கவசம் வழங்குகிறாா் மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன்.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள அடைக்கலப்பட்டணத்தில் திமுக சாா்பில் தண்ணீா் பந்தல் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் மேகநாதன் தலைமை வகித்தாா். கிழக்கு ஒன்றிய அவைத்தலைவா் தளபதி முருகேசன், ஒன்றிய துணைச் செயலா்கள் நாகராஜ், பாண்டியன் , பொருளாளா் ராமசாமி முன்னிலை வகித்தனா்.

மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் பங்கேற்று, தண்ணீா் பந்தலை திறந்து வைத்து கபசுரக் குடிநீா், நீா் மோா், தா்பூசணி பழம், முகக் கவசம் வழங்கி பேசினாா்.

நிகழ்ச்சியில், நிா்வாகிகள் ஜெகதீசன், ரமேஷ், பொன்செல்வன், ராஜாமணி, தினேஸ்பாண்டியன், சிவராஜன், கவாஸ்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com