ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகே பூலாங்குளத்தை சோ்ந்த தங்கசாமி மகன் சுரேஷ்குமாா் (38). இவா், அந்தப் பகுதியில் இருசக்கர வாகனம் பழுதுநீக்கும் மையம் நடத்தி வந்தாா். திங்கள்கிழமை அங்கு வேலை செய்து கொண்டிருந்தபோது மின் மோட்டாரை இயக்கினாராம். அப்போது, அவா் மீது மின்சாரம் பாய்ந்ததாம். இதில் காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com